Saturday, December 13, 2008

அடிமையாகுது நாடே அடிமையாகுது

அடிமையாகுது நாடே அடிமையாகுது - அந்த
அமெரிக்காவ விரட்ட மக்கள் படையாமாறு...(2)

நெல்லு சோளம் கேழ்வரகு அழிச்சது யாரு - நம்ம
நிலம் தரிசா போனதுக்கு காரணம் யாரு...(2)

பத்து வட்டி கொடுக்கிறவன் பகட்டப்பாரு - இப்ப
பத்து ஏக்கர் உழவன் கூட பட்டினிச்சாவு
(குழு - அடிமை))

பசுமை புரட்சி கொண்டுவந்த அன்னியன் யாரு - அவன்
பாலிடால் பாச்ச சொன்னான் தண்ணிக்கு பதிலு (குழு)

ஏந்தி விட்ட ஏணிய எடுத்தவன் யாரு - இப்ப
பூச்சி மருந்து உழவனுக்கு கடைசி சோறு
(குழு - அடிமை)


ஆலைகளுக்கு கடக்கால் எடுத்தது யாரு - அங்கு
ஆர்த்து எழும் எந்திரத்தை இயக்கினதாரு -எங்க
ஊர் தொழிலாளர்களை விரட்டியதாரு
உலகத்தை விழுங்க வரும் கழுகை வெட்டி போட்டிடு கூறு

கோடி கைகல நொடியில் ஒடித்தது யாரு
தரிய குப்பையாக்கி நாடெங்கும் குவிச்சது யாரு - இப்ப
தரியோட ஏக்கம் ஒரு வேலச்சோறு - இனியும்
தாமதிக்காதே வெள்ளை மாளிகை தகரு
(குழு - அடிமை)

உப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே

உப்பு வெல கூடிப்போச்சு அண்ணே சுப்பு அண்ணே
இந்த துப்புக்கெட்ட கவர்மெண்ட்டுல
கள்ள சாராய மலிவு தன்னெ - தமிழக
சர்க்காரு புண்ணியத்துல - அந்த

முருங்கை காயைய அண்ண முழம் போட்டு விற்கிறாரு
அந்த வாழத்தண்டு கெட்டகேடு வகுந்து எடப்போட்டு விற்கிறாருங்க
இப்ப காய்கறி எல்லாமே காசுக்காரனுக்கு
கத்தாழ தான் நம்ம மக்களுக்கு - சோத்து
கத்தாழ தான் நம்ம மக்களுக்கு
(உப்பு வெல)
அண்ணே ஒரு ரூபாய் புளிகேட்டா உன்
நாக்க கொஞ்சம் காட்டுங்கிறான்

ஜயா இரண்டு ரூபாய் எண்ணெய் கேட்டா உன்
உள்ளங்கையை நீட்டுங்கிறான்

மல்லி கருவேப்பில்லை கில்லி போட சொன்ன
பல்லக்கடிக்கிறான் படிக்கல்லை தூக்கிறான்

(உப்பு வெல)

Monday, November 24, 2008

பெப்சி கோக்கு மிராண்ட

பெப்சி கோக்கு மிராண்ட
பெரியாஸ்பத்திரி வராண்டா
சொன்ன பேச்ச கேட்கலன்ன சுண்ணாம்பு தாண்டா (2)
..
கோக்கு பானமுன்னு சொன்ன பய யாரடா
·புல் பாட்டிலுமே பூச்சி மருந்து தானடா
பல்லு கரையை நீக்கலாம் கக்கூசு கரையை போக்கலாம்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
கோக்கு பெப்சியோட தாகம் ரொம்ப பெரிசுடா
அது உருஞ்சும் பானம் ஆறும் குளமடா
பெப்சி உறிஞ்சி வாழுறான்
மச்சி உறிஞ்சி சாகுறான்
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)
..
பெப்சி மாதவனும் விக்கிரமும் யாருடா
ரசிகர் பாக்கெட்டுல மிளைடு போடும் கேடிடா
அவனுக்கு ஏழு கோடிடா
உனக்கு நாம் கோடிடா
வாங்கலாம் பருகலாம் சாகலாம்
(பெப்சி)

Thursday, November 20, 2008

உலகத்தை விடிய வைத்தது நீதானடா

உலகத்தை விடிய வைத்தது நீதானடா
உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா
நீயின்றி உலகம் இல்லையே
வானமே உனது எல்லையே
உனக்கென்று ஏதும் இல்லையே....
(உலகத்தை)
..
இடி மின்னல் மழையானாலும்
தளறாது உந்தன் கைகள்
குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்
உனது வியர்வை அனையை மீறுமே
உயிர் பெறும் மின்சாரமே
நரம்பில் ஓடும் இரத்தம் போலவே
சிதறிபாயும் பூமியாவுமே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்
உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்
கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே
வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்
நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்
உனது உடல் இழையாய் வேகும்
உலகமே பகலாய் மாறும்
உனது விழி ஒரு நொடி மூடும்
உலகமே ஒளியைத் தேடும்
உனக்கென்று ஏதும் இல்லையே
(உலகத்தை)

Tuesday, November 18, 2008

வீர வணக்கம்

கோடான கோடி மக்களுக்காக
குருதி சிந்திய தோழர்களே
வர்க்கப் போராட்ட பாதையிலே.....ஏ.....
வீழந்து புதைந்திட்ட வித்துக்களே
வீரவணக்கங்களே, வீரவணக்கங்களே,
..
சாதிக்கொடுமை பண்ணைக்கொடுமை
தலைவிரித்து ஆடிடும்
தர்மபுரி வடாற்காடு வயல்வெளியும் கிராமமும் - அங்கே
அப்பு பாலன் பெயரைச் சொன்னால் போதும்
ஆளும் வர்க்கத்தின் குலை நடுங்கிப் போகும்
ஆல மரங்கள் சாய்ந்தடா....ஆ.........
அழுத கண்கள் சொல்லி மாலாதடா........(2)
..
இருள் என்றால் தைரியமுள்ள எவனுக்கும் பயம்வரும்
எங்கள் இருட்டு பச்சை பெயர் கேட்டால்
எதிரிகளுக்கு ஜீரம் வரும் - அந்த
மலைபோன்ற தோழன் மாண்ட துயரம்
காடு மலைக்கூட கண்ணீர் சிந்திகதரும்
தர்மபுரி மீண்டும் சிவப்பாகும் உண்னை
கொன்றவன் வழக்கன்று தீர்ப்பாகும். (2)
..
துப்பாக்கிகள் வெடித்த போதும் தூங்கி கிடந்த மக்களே
ஒற்றை பறை ஓசைகிளப்பி உணர்வீட்டி எழுப்பினான்
எங்கள் சுப்பாராவ் பானிக்கிரகு தோழன்
இழுக்கும் மூச்சைக்கூட இசையாக்கிய கலைஞன்
மண்ணில் அவரது உடல் மறைந்தாலும்
மக்கள் மூச்சோடு கலந்தானே இசையாய் கலந்தானே - (2)
..
தெலுங்கான பிராந்தியத்தில் செரபண்டராவ் குரல் கேட்டால்
அந்த சிறைச்சுவரும் இடிந்துவிடும் எதிரிகளின் குலைநடுங்கும்
அவன் வாயில் தெறிக்கும் வார்த்தை இடியாகும்
போனாவில் கிழிக்கும் வரிகள் தீயாகும்
மக்கள் யுத்தமே மூச்சென வாழ்ந்தவன்
மக்கள் இதயத்தில் கலந்தானே - (2)
(கோடான)

Friday, May 30, 2008

நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !

கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !

குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே

சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !

ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !

தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !

துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
துரோகிகள் மதம்தான் உன் மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

அண்ணன் வர்றாரு

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க
ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏ
மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு
தண்டல் எடுத்து வையுங்க
எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க
பப்பள பளபள பட்டு சலவ சட்டை
ஆகா பட்டு சலவ சட்டை
தொண்டையில் உத்திராட்ச கொட்ட
ஒரு உத்திராட்ச கொட்ட
அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம்
மல்ட்டிகலர் பட்டை
மயங்கி போகாதிங்க கிட்ட
தளபதி பாட்ஷா நாயகனெல்லாம்
அண்ணே வரலாறுதான்
ஹிரோ அண்ணனோட நிழல்தான்
அதில் டூயட் கனவு பாதி சீன தூக்கினா
பாதி கத நெசந்தான்
அத பாக்குறோம் தினம் தினம் தான்
கள்ளுமுள்ளுகூட பொதருகுள்ள ஓடிக்கிட்டிருந்தாரு
சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அண்ணன் ஓட்டிக்கிட்டிருந்தாரு சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அப்படி ஜில்லா ஊருகுள்ள கடைய தொறந்தாரு
பட்ட கரையில் நொழஞ்சாரு
கல்யாண காதுகுத்து கோயில் திருவிழா எதுவும் நடக்காது
அண்ணன் இல்லன்னா எதுவும் நடக்காது
ஒரு அடிதடி கலாட்டா வெட்டுகுத்து கலவரம் தொடங்காது
அண்ணன் இல்லாமா பொணமே விழுவாது
தரக்கடை, பழக்கடை தட்டுவண்டி சங்கம் அண்ணந்தான் தலைவரு
நம்ம அண்ணந்தான் தலைவரு
தண்டலுக்கும் அண்ணன் தான் டெண்டரு
சாதி சங்கத்தில் தலைவரு
ஆக்கப்பட்ட அனைத்துக்கும் தலைவரு
அட அப்புறந்தாண்டா அண்ணன் புதுசா காரு எறக்குனாரு
வெள்ளை கண்டஸா எறக்குனாரு
காரில் போகையில் கண்ணாடி வழியே
குடிசையே பாத்தாருஅண்ணன் குடிசைய பாத்தாரு
மனக்கணகொன்னு போட்டாரு
பிளாட்டு மனக்கணக் கொன்னு போட்டாரு
ஏ மலையப் பாத்தாரு கிரானையிட்டு விலைய நினைச்சாரு
காவேரி மணலப்பாத்தாரு கரையோர மரத்தையும் பாத்தாரு
அட இது தெரியலையே இத்தனை நாளுன்னு
முடிவொன்னு எடுத்தாரு, வேட்பு மனுவ கொடுத்தாரு
போட்டிக்கி நின்ன கட்சிகாரன்கிட்ட துண்டு வீசினாரு
எலும்பு துண்டு வீசினாரு, ரெண்டு குண்டும் வீசினாரு
அட அப்புறந்தாண்டா கட்சியில் அண்ணன் தளபதி ஆனாரு
ஊரல பாதிய தின்னாரு
சரக்கு ஓட்டுன காலத்தில்
அண்ணன் சாதாரண கேடி
இப்ப இருக்குது பல கோடி
கலக்டரு வாரார் வூடு தேடி
தண்ணி போட நிதிபதி ஜோடி
போலிசு அணைச்சி போட்ட பீடி
இந்த தீடீர் பணக்காரன் அரசியல் ரெளடி வாரான் நம்ம தேடி
தேர்தல் தேதி வருகுது கூடி
தேர்தல் தேதி வருகுது கூடி
....