Thursday, May 29, 2008

தோழர் பகத்சிங்கே

தாய் நாட்டின் மானங்காக்க
தூக்குக் கயிற்றை துணிந்தே முத்தமிட்ட
பஞ்சாப் சிங்கம் பகத்சிங் தோழனே .....

அந்த வீரன் இன்னும் சாகவில்லை - அவன்
தியாகம் இன்னும் மறையவில்லை

அண்ணல் காந்தியின் அகிம்சை பாதையிலே - வீரத்தை
அடகுவைத்து மண்டியிட்ட நேரத்திலே - வெள்ளையாதிக்க
இருள் தன்னை கிழித்திடவே வானில்
விடி வெள்ளிகள் மூன்று உதித்தனவே -
(அந்த)

பரங்கியர் போட்டு வந்த ஆட்டமெல்லாம் - அது
பாராளுமன்றத்துக்கு கேட்கலையாம் - அந்த
செவிடர்களின் செவிகளுக்கு உறைத்திடவே - கை
எறிகுண்டை வீசியெறிந்த தோழர்களே
(அந்த)
ஜாலியன் வாலாபாக்கில் மக்களையே - வெள்ளை
வெறி நாயாம் ஜெனரல் டயர் சுட்டானெ - அந்த
கொடுமைகளுக்கெதிராக குரல் எழுப்பி - தூக்குக்
கயிற்றுக்கு இரையான தியாகிகளே -
(அந்த)
சினிமா சூதாட்ட போதையிலே - சிக்கி
சீரழியும் எனதருமை இளைஞர்களே - அந்த
தியாகச்சுடர் பகத்சிங்கின் பெயராலே - அணி
திரண்டிடுவோம் கொடுமைகளை அழித்திடவே.

No comments: