Friday, May 30, 2008

கஞ்சி ஊத்த வக்கில்ல

கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கவர்மெண்டு
நாட்டைக் கொண்டு போயி வித்துப்புட்டு
என்னடா பார்லிமெண்டு
ஓட்டெதுக்கு........................... சீட்டெதுக்கு
ஓடுங்கடா..........................நாட்டவுட்டு

இந்த - ஒரு சாண் வயித்துக்குத்தான் இம்புட்டு பாடு
வயித்தல நெருப்பக் கொட்டிப்புட்டான் பாரு - நாங்க
ஒக்கார வச்சி சோறு போடச் சொல்லி கேட்டமா
ஓசியில உப்புபுளி மொளகாதான் கேட்டமா - ஏண்டா
சிக்காத புதிராடா வெலவாசி உயர்வு நீ
ஒக்காந்து திங்கிறவன் ஒனக்கென்ன நோவு

(கஞ்சி ஊத்த வக்கில்ல)


கருவக் காடெல்லாம் கட்டடமா போச்சு
வெளிய போறதே பெரும்பாடா ஆச்சு
ஒண்ணுக்குப் போகக் கூட இருட்டணும் பொழுது
பொம்பளைங்க பாடு பொறந்ததே தவறு
கட்டணக் கழிப்பிடம்னு பஸ்டாண்டில இருக்கு
காலுகழுவ ஒரு கல்லு தாண்டா கெடக்கு
நகராட்சி வளந்து மாநகராட்சி
நாலணா வளந்து ஒரு ரூபா ஆச்சு - அட
கக்கூசுக்கும் கூடவா வெலவாசி உயர்வு - அதுக்கும்
காட்டு ஒப்பந்தத்தில் கண்டிசனா இருக்கு

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

எம்ப்ளாய்மெண்டு ஆபிசின்னு ஊருக்கூரு இருக்கு
அத - நம்பினவன் கழுத்துக்கு நிச்சயமா சுருக்கு
சுவரெல்லாம் தொங்குதடா சுயவேல வாய்ப்பு
கவர்மெண்டு வேலைக்கு வச்சிப்புட்டான் ஆப்பு
ஆட்ட மாட்ட வித்துத்தாவே காலேசு படிச்சோம் - இப்போ
வாத்து வளக்கவாடா எம்ப்ளாய்மெண்டில் பதிஞ்சோம்
அட - பள்ளிக்கு எதுக்குடா தங்கத்தில மூக்குத்தி - வெறும்
பம்மாத்து எதுக்குடா தள்ளுங்கடா இடிச்சி

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

ரேசன் கடையின்னு வச்சிருக்கான் பேரு - இந்த
தேசத்தின் பெருமையை அங்க வந்து பாரு - இப்போ
கவர்மெண்டு சீமெண்ணெய்க்கு அடிச்சிட்டான் கலரு
கறுப்பு மார்க்கெட்டுக்கு கொடுத்திட்டான் பவரு
புழுங்கலு குருணை பச்சரிசி நொய்யி -ஒங்க
புழுத்த அரிசி வாங்க ஏழுட்டு பையி
ரேசன் கடையின்னு சொல்லாதடா பொய்
கோதுமை பாமாயில கொண்டு வந்து வய்யி
பாதிய முழுங்குற படிக்கல்லு தூங்குது - செஞ்ச
பாலத்துக்கு தண்டனையா தெராசு தொங்குது - கடை
மீதியையும் மூடுடானு அமெரிக்கா நோண்டுது - நம்ம
புரட்சித் தலைவி ஆட்சி பூட்டைக் காட்டுது

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

சோறு போட வக்கில்லாத ராசா மகராசா - இத
சொர்க்கமின்னு சொல்லுறானே கேக்குறவன் லூசா
வேலதர வக்கில்லாத ராசா மக....ராசா
ஊர மேய்க்க ஆசைப்பட்டா அது என்ன லேசா
நடக்கப் படிக்கத் தண்ணி குடிக்கவும் காசா
நாயி கணக்கா வரி புடுங்கத்தான் அரசா
சொடக்கு போடுறான் அமெரிக்கா லேசா - சும்மா
சொழண்டு ஆடுறான் இவன் சுதந்திர அரசா - நாம
குனியக் குனிய இவன் குட்டுறது புதுசா - மக்கள்
இணைய இணைய திரை விலகிடும் முழுசா

(கஞ்சி ஊத்த வக்கில்ல)

No comments: